இந்திய தண்டனை சட்டம் பிரிவு 148 (IPC Section 148 in Tamil)
விளக்கம்
கலகம் செய்யும் சட்டவிரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் அல்லது மரணத்தை உண்டாகக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
அபாயகரமான ஆயுதமேந்திக் கலகம்
ஒரு அபாயகரமான ஆயுதத்தை அல்லது அநேகமாக மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் ஏதாவதொன்றை ஏந்தி கலகத்திற்கு குற்றவாளியாகும் எவரேனும், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க