நல்வழி
நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன. (கடவுள் வாழ்து உட்பட)
கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
பொருள்:
பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும் தா
English Transliteration
Paalum thelithenum paagum paruppumivai
naalum kalandhunakku naan tharuven kolamsei
thungak karimugaththuth thoomaniye nee enakkuch
sangath tamil moondrum thaa
நல்வழி : 1
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்
பொருள்
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…
English Translation
The merits and sins committed in past life
are all that are left to those born on this earth!
This is what every religion says and nothing else
It is best to avoid evil and do deeds of merit.
…..
ஔவையார் நல்வழி eBook
ஔவையார் நல்வழி PDF Free Download
(for PC & Tab)
ஔவையார் நல்வழி Mobi Free Download
(For Kindle Reader, Amazon Kindle app)
ஔவையார் நல்வழி ePub Free Download
( for iPhone & android )