பிறந்த குழந்தைக்கு ஒருநாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன.
அதுமட்டுமின்றி தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்றுகள் வருவதில்லை.
மேலும் வயிற்றுப்போக்கு, சீதபேதி, சளி நோய்கள், சிரங்கு, காதில் சீழ் போன்ற பல நோய்களுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தி தாய்ப்பாலில் இருக்கிறது.
அந்தவகையில் பிறந்த குழந்தைக்கு தாய் ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
எத்தனை முறை கொடுக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும்.
எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்?
மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.
எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும்?
- ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம்.
- அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.
போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என எப்படி அறிந்து கொள்வது?
- ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
- குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
- இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
….
பிறந்த குழந்தைக்கு ஒருநாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?Source link