முகமது நபி பொன்மொழிகள்
முகம்மது நபி பொன்மொழிகள்:
தனது சமூகத்தார் இன்னொரு சமூகத்தின் மீது கொடுமை புரியும் போது, அதற்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்.
முகமது நபி
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad) பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632. சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் .
முகம்மது நபி பற்றிய மேலும் விவரங்களுக்கு. . .
முகமது நபி பொன்மொழிகள்:
- நாம் யாருக்கும் மேலல்ல. யாரும் நமக்கு மேலோர் அல்ல.
தீமையை எங்கு கண்டாலும், உன் கரங்களால் தடு. இயலவில்லையா, உன் வாய்ச் சொல்லால் தடு. அதுவும் இயலவில்லையா, உன் மனத்தாலாவது அதை வெறுத்தி விலகிச் செல்.
- உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன்.
- நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும், பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.
- தொழுகை முஸ்லீம்களின் முக்கியக் கடமை. தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.
உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார்.
- மனிதர்களைப் பற்றித் தீய எண்ணங்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- கொடுக்கும் கையானது வாங்கும் கையைவிட மேலானது.
கண்டிப்பாக மதுவே அனைத்து கெட்ட காரியங்களுக்கும் தாய் ஆகும்.
- தனது சமூகத்தார் இன்னொரு சமூகத்தின் மீது கொடுமை புரியும் போது, அதற்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்.
மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.