முதுகு, தோள் பட்டை வலியை போக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க
இன்று வேலைக்கு செல்லும் பெரும்பாலோனர் முதுகு, தோள் பட்டையை வலியால் அவதிப்படுவதுண்டு.
இதற்காக ஜிம்மிற்கு தான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தவாறே சில யோகப்பயிற்சிகளை செய்யதாலே போதும் முதுகு, தோள் பட்டை வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
இதற்கு யோகாவில் “ஆகர்ண தனுராசனம்” என்ற ஆசனம் உதவிபுரிகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
செய்முறை

- விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.
- இடது கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில் அணைத்துக் கொள்ள வேண்டும். பின் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும்.
- வலது காலின் விரல்களை இடதுபக்க செவிக்கருகில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். கண் பார்வையை ஒரே இடத்தில் வைக்க வேண்டும்.
- சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் மெதுவாக வலது காலை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 25 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.
நன்மை என்ன?
- நெஞ்சுப்பகுதி நன்கு விரிந்து நுரையீரல் நன்கு வேலை செய்து சுவாச மண்டல பிரச்சனைகள் சரியாகிறது.
- புஜங்கள் பலமாகிறது.
- முதுகில் ஏற்படும் இறுக்கம் குறைகிறது.
- ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது.
- தோள்பட்டை வலி குறைகிறது.
…
முதுகு, தோள் பட்டை வலியை போக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க Source link