- 1

5 ஆண்டுகளுக்கு முன்னரே மார்பக புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் தெரியுமா?

287 0

இங்கிலாந்து ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

இங்கிலாந்து ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட 90 நோயாளிகளின் இரத்த மாதிரிகள் மற்றும் முற்றிலும் ஆரோக்கியமான பெண்களின் 90 மாதிரிகளும் மருத்துவர்களால் சேகரிக்கப்பட்டது. இதன் துல்லியத்தை கண்டறிய இந்த இரத்த மாதிரிகளை மேலும் மேலும் பரிசோதித்தோம்.

இரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை

இது குறித்து நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் டானியா அல்பதானி கூறுகையில், “மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சைக்கு என்று ஏகப்பட்ட செலவுகள் வருகின்றன என்று அவர் கூறினார். மேலும் இதன் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிய உதவும் விலையுயர்ந்த சாதனங்கள் இனி தேவைப்படாது. இது ஒரு எளிதான மாற்றமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2.1 பில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்

2.1 பில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.1 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் 27 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் இறந்தனர். இது மற்ற வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இறப்புகளில் சுமார் 15 சதவீதம் ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பே அடையாளம் காணலாம்

முன்பே அடையாளம் காணலாம்

அல்படானி கூறுகையில், “இந்த ஆராய்ச்சியில் நாங்கள் மேலும் பணியாற்ற வேண்டியிருக்கிறது , மேலும் இதை மேம்படுத்த வேண்டும். இருப்பினும் இந்த ஆராய்ச்சியில், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே அதன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்பது ஒரு சந்தோஷமா செய்தி . இதன் துல்லியத்தை மேம்படுத்த நாங்கள் இன்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதை நீக்க வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோளாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பரிசோதனை 4 அல்லது 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்

பரிசோதனை 4 அல்லது 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்

இந்த ஆராய்ச்சியின் பயன் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் வந்து விடும். இந்த ஆராய்ச்சி குறித்த மேலும் விவரங்கள் இங்கிலாந்தின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தால் கிளாஸ்கோ என்ற புற்றுநோய் மாநாட்டில் வழங்கப்பட்டது.

புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்

புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்

மேலும் மக்கள் புற்றுநோய் விழிப்புணர்வை பெற புற்றுநோய் எங்கு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி பரவுகிறது போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். நிட்டி பாக் நகரில் உள்ள ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சஜ்ஜன் ராஜ்புரோஹித் கூறுகையில், “மார்பக புற்றுநோயைப் பற்றி அதன் உடற்கூறியல் அறிவைப் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது அவசியம். மார்பகமானது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். மார்பகத்தின் செயல்பாடு அதன் திசு வழியாக தாய்ப்பாலை உருவாக்குவதாகும். இந்த திசுக்கள் முலைக்காம்புடன் குழாய்களின் வழியாக இணைக்கப்படுகின்றன. இது தவிர, கொழுப்பு, நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் சில நிணநீர் சேனல்கள் போன்ற சில நார்ச்சத்து பொருட்கள் இங்கு உள்ளன. அவை தான் பெண்களுடைய மார்பக கட்டமைப்பை நிறைவு செய்கின்றன. மார்பக புற்றுநோய்கள் இருந்தால் மற்றும் பரவாமல் இருந்தால், எளிதாக சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் தாமதமாக சிகிச்சையளிப்பது பெண்களின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை குறைக்கும். எனவே மார்பக புற்றுநோய்களில் ஆரம்பகால நோயறிதலை நாம் கண்டறிய வேண்டும் என்கிறது இந்த ஆராய்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.



Source link

Related Post

- 9

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

Posted by - அக்டோபர் 5, 2017 0
சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள் சிறுதானியங்கள்: நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு…
- 14

வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள்

Posted by - நவம்பர் 7, 2020 0
வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள் பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளை படுதல் பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும்…
- 16

உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்

Posted by - ஏப்ரல் 1, 2020 0
உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள் உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம். ஏனெனில், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து காப்பதோடு, உங்களுக்கு உற்சாகம் அளித்து, செக்ஸ்…
- 19

உடலை நோய்கள் தாக்காமல் இருக்க எந்த நேரத்தில் எந்த டீ குடிக்கணும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 20, 2020 0
Wellness lekhaka-Saravanan kirubananthan | Updated: Monday, April 20, 2020, 11:44 [IST] இந்தியர்களுக்கு தேநீர் என்பது சுவையான பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு.…
- 29

கட்டிகள் பழுத்து உடைய…!

Posted by - நவம்பர் 29, 2020 0
கட்டிகள் பழுத்து உடைய…! வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot